Anba Sumanthu |
---|
அன்ப சுமந்து
சுமந்து அல்லும் பகலும்
நினைந்து இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா
அன்ப சுமந்து
சுமந்து அல்லும் பகலும்
நினைந்து இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா என்னை
தவிக்க விடலாமா
வான் மழையில்
தான் நனைந்தால் பால்
நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம்
தருமா
மரக்கிளையில்
ஒரு குருவி கூடுக்கட்டி
வாழ்ந்ததே அந்தரத்தில்
ஆடவிட்டு ஆலமரம்
சாய்ந்ததே இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா என்னை
தவிக்க விடலாமா
நீ அரைச்ச
சந்தனமே வாசனை
தான் மாறலையே
நேசமென்னும்
கோட்டையிலே
காவல் இன்னும்
தீரலையே
பேசாமல்
போனதென்ன பாச
புறா விண்ணிலே
வீசாமல் வீசும் இங்கே
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த
மாமா என்னை தவிக்க
விடலாமா
அன்ப சுமந்து
சுமந்து அல்லும் பகலும்
நினைந்து இன்பம் சுமக்க
வைத்த மாமா என்னை
தவிக்க விடலாமா என்னை
தவிக்க விடலாமா அன்பை
சுமந்து சுமந்து