Anbale Thannuyirai |
---|
அன்பாலே தன் உயிரை
அமுதாக்கி
என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள்
அன்னையவள் பெற்ற பயன் அடையாமல்
உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்
உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்
கண்மூடி உறங்கி விட்டாள்
பெற்றவர்க்கு பெருமை தரும்
பிள்ளையே பிள்ளை அவர்
பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை
உற்ற பிள்ளை செய்யும் பிழையால்
பெற்ற மனம் குளிர்வதில்லை
பெற்றமனம் கொதித்ததனால்
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
பெற்றவர்க்கு பெருமை தரும்
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
அமைதியில்லை அமைதியில்லை