Anbe Aaruyire

Anbe Aaruyire Song Lyrics In English


அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே

அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே ஜீவன் ஓயும் முன்னே வருவேன் ஜீவன் ஓயும் முன்னே நான் வருவேன் உன்னிடமே

அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே

நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல் நேசம் அழியாது பெண் மானே உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே உருவம் குலைந்தேதான் போனேனே

என் காதலின் சின்னமே ஏங்காதே என் அன்னமே மண்ணில் நான் இங்கே மறைந்தாலும் மயிலே உன் எண்ணம் மறையாது கண்ணே என் தேகம் சாய்ந்தாலும் காற்றாய் உனைத் தேடி வருவேனே


அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே

தீபம் இல்லாத கோயில் போலே தினமும் தவித்தேனே நான் இங்கே பூக்கள் இல்லாத சோலை போலே பொழுதே பூங்காத்தே நீ அங்கே

உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே இனியும் சுமை தாங்க முடியாது எந்தன் உயிர்க் கூடு தாங்காது உன்னை நான் வந்து பார்க்காமல் உருகும் என் மூச்சு போகாது

அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே