Anbe Nee Ange |
|---|
அன்பே நீ அங்கே
நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பேஏ
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
எந்தன் வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்
இன்று இருள் சூழ என் செய்தேன் பாவம்
இருள் சூழ என் செய்தேன் பாவம்
நானும் அங்கே நீயும் இங்கே
அன்பேஏ
இன்ப கரை நாடும்
இல் வாழ்வின் ஓடம்
துன்ப புயலாலே
அலை மோதி ஆடும்
இந்த நிலை மாறும்
நாள் என்று கூடும்
நிலை மாறும் நாள் என்று கூடும்
என்னும் நினைவாலே கண்ணீரில் வாடும்
நினைவாலே கண்ணீரில் வாடும்
நானும் இங்கே நீயும் அங்கே
அன்பே
நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது எங்கே
அன்பேஏ
