Anbe Pudhu Kavithaigal |
---|
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
மன்மத பாணம் ஒன்று
புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
ஆனந்த கங்கை ஒன்று
எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில்
கட்டிளம் காளை ஒன்று
கிறங்க கூடும் நூறு ஆசைகளில்
மத்தள மேளம் ஒன்று
ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
என் மடி ஊஞ்சல் உண்டு
இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில்
உன் பசி தீரும் இன்று
உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில்
அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ