Anbinaale Aalavandha

Anbinaale Aalavandha Song Lyrics In English


உன் செல்வத்தைக் கண்டதால்
சிந்தாபாத் கூறியே
செவியாற வாழ்த்துகின்றார்
உன் உள்ளத்தை கண்டதால்
உயிர் காதல் கொண்ட நான்
உருகியே வாழ்த்துகின்றேன்

அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட
சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும்
ஜீவ ஜோதியே

சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட
சீதக்காதியே
திராட்சை போல இனிக்க பேசும்
ஜீவ ஜோதியே
சிங்கார ரூபாமாறனே
என் வாழ்வின் பாதியே
சிங்கார ரூபாமாறனே
என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி


என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

இரு துருவம் நமது வாழ்வு
இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால்
இன்ப நிலையிலே

இரு துருவம் நமது வாழ்வு
இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால்
இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான
ஒளியும் வீசுதே
என் இதய வானில் புதுமையான
ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி

என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த
அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி