Anbu Malar

Anbu Malar Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஓஹோஓஓ
ஓஹோஓஓஓ

அன்பு மலர் ஆசை மலர்
இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான்
பாச மலரம்மா

தன் பசியை கருதாது
தங்கை பசி தீர்த்து
தன் பெருமை நினையாது
தங்கையினை காத்து
அன்னைக்கு அன்னையாய்
தந்தைக்கு தந்தையாய்
ஆதாரம் கொள்வது தான்
பாச மலரம்மா


தான் ஆடாவிட்டாலும்
சதையாடும் என்பார்
தடை போட்டு வைத்தாலும்
சேர்ந்துவிடும் என்பார்
உருவம் இரண்டாக
உணர்ச்சியெல்லாம் ஒன்றாக
உள்ளத்தில் மலர்வது தான்
பாச மலரம்மா

சேய்ப் பறவை குரல் கேட்டு
தாய்ப் பறவை வாடுதே ஏ
தேடி வரும் பறவை எல்லாம்
தாய்ப் பறவை ஆகுமா ஆ ஆ
கன்றழைக்கும் குரல் கேட்டு
தாய்ப் பசுவும் ஓடுமே ஏ
காண வரும் துணையெல்லாம்
தாய்ப் பசுவாய் ஆகுமா