Anbu Vanthathu Male |
---|
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
நாலு பேர்கள் வாழும் வாழ்வு
நாமும் வாழலாம்
தினம் நல்ல ஆடை நகைகளோடு
மலர்கள் சூடலாம்
கண் இரண்டில் கலக்கம் இன்றி
அமைதி காணலாம்
கண் இரண்டில் கலக்கம் இன்றி
அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று
உறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம்
தாயில்லாத பிள்ளை தன்னை
நான் விடமாட்டேன்
நானில்லாத போது
தேவன் கைவிட மாட்டான்
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
வாழ்ந்தால் எந்நாளும்
உமக்கென வாழ்வேன்
வாடா மலர் போலே
உங்களைக் காப்பேன்
மன்னர் குலப் பிள்ளைகள் போல்
மகுடம் சூட்டுவேன்
நீ மங்கை ஆகும் போது
கையில் வளையல் போடுவேன்
வாழ்த்து பாடுவேன்
மஞ்சளோடும் மலர்களோடும்
வாழ்ந்திட செய்வேன்
அண்ணனோடும் தங்கையோடும்
தந்தை வாழுவேன்
அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
லால லால லா லால்ல லால லால லா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்