Androru Naal |
---|
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்
விடவும் மாட்டேன்
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்
விடவும் மாட்டேன்
அன்றொரு நாள்
அவனுடைய பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன்
ஆண்டி போல வேஷமிட்டு
அவன் இருப்பானாம்
அவனை அரசன் போல சிங்காரித்து
தேர் இழுப்பாராம்
ஆண்டி போல வேஷமிட்டு
அவன் இருப்பானாம்
அவனை அரசன் போல சிங்காரித்து
தேர் இழுப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை
மன வீட்டுக்குள்ளே அவனிருந்தும்
காண்பவரில்லை
அன்றொரு நாள்
அவனுடைய பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன்
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை
அவன் ஆலயத்து மணியில்தான் எத்தனை ஓசை
அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை
அவன் ஆலயத்து மணியில்தான் எத்தனை ஓசை
சுந்தரப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
அதை தொடர்ந்து நானும் பார்த்து வந்தால்
தீர்ந்திடும் வாட்டம்
ஆஆஅஆஆஅஆஆஅஆஅஆஅ
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்
விடவும் மாட்டேன்
அன்றொரு நாள்
அவனுடைய பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன்