Androru Naal Unai Kanden |
---|
நன நன னா
நானன னா னா
நானன னா னா
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
அன்றொரு நாள் உன்னை கண்டேன்
கண்ட நொடி மையல் கொண்டேன்
மையல் கொண்டேன்
மையல் நட்பாகி
நட்பே காதலாகி
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்
காதலே உயிராகி
நாம் நெகிழ்கின்றோம்
நாம் விரல்கள் கோர்த்த பயணம்
நாம் இதழ்கள் சேர்த்த தருணம்
அவை எல்லாமே கண் முன்னே மின்னல் வெட்ட
நாம் மழையில் நடந்த இரவு
நாம் நெருப்பில் குளித்த நிலவு
அவை எல்லாமே உல் நெஞ்சில் மின்னல் வெட்ட
இருவர் : கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்த்து
வருகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே
அன்பேநிநிபமபா
தன திரனாஆஆ
ஹாஆஆ
அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்
அன்றொரு நாள் மாலை தந்தாய்
பின்னொரு நாள் மோகம் என்றாய்
மோகம் தீயாகி
தீயே நீயாகி
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்
காதலின் மஞ்சத்தில்
நாம் கலந்ததும்
நாம் கருவில் சேர்த்த புதையல்
ஓர் உருவம் கொண்டு வளர
அதன் கண்ணோடு உன் கண்ணை காண்பேனடா
நான் குனிந்து மண்டியிட்டு
உன் வயிற்றில் காது பதித்து
அதன் வாயோடு உன் சொற்கள் கேட்பேனடாஆ
இருவர் : கரையுது காலம்
நிறையுது காதல்
இருவரும் சேர்ந்து
வரைகிற ஓவியத்தில்
எண்ணம் யாவும் வண்ணமாக
பூமி வண்ண கிண்ணமாக
கைகள் ரெண்டும் தூரிகைகள்
வாழ்க்கை என்னும் காகிதத்தினிலே
அன்றொரு நாள்
அன்றொரு நாள்
மாலை தந்தாய்
மாலை தந்தாய்
பின்னொரு நாள்
பின்னொரு நாள்
மோகம் என்றாய்
மோகம் என்றாய்
மோகம் தீயாகி
தீயே நீயாகி
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ்
வோஹு ஹு ஆஹ் வோஹு ஹு ஆஹ் ஆ ஆ