Annaandhu Paar |
---|
அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
ஆராய்ந்து பார் வாழ்வே
ஒரு பொய் சித்திரம்
வீண் என்றால்
விதையாக மாறு ஏன்
என்றால் விடையாக
மாறு நான் என்றால்
நாமாகி ஈன்றாடு
அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
ஆராய்ந்து பார் வாழ்வே
ஒரு பொய் சித்திரம்
சதி இருந்தும்
தலை விதி இருந்தும்
மெய் கண்ணில்
பொய்மை தீட்டாதே
முள் இருந்தும்
கூர் கல் இருந்தும் உன்
பாதம் போகும் வழி
மாறாதே
சுமை இல்லா
உறவு எங்கே நீ தேடு
துயர் இல்லா நாளை
உண்டா இன்றே
கொண்டாடு
பகை என்றால்
பனியாக மாறு வினை
என்றால் சுனையாக
மாறு இருள் என்றால்
சுடராகி விளையாடு
அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
பூவாக மாறு
நாளை என்பதில்லை
இல்லை வாசம் வீசு
சிறகாக மாறு
வானம் என்பதில்லை
இல்லை மேகம் உரசு
வலியில்லா
தாய்மை எங்கே நீ தேடு
புயல் இல்லா தோனி
உண்டா நீயும் போராடு
வலி என்றால்
மடியாக மாறு பயம்
என்றால் கொடியாக
மாறு பிழை என்றால்
அறத்தோடு தள்ளாடு
அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
ஆராய்ந்து பார் வாழ்வே
ஒரு பொய் சித்திரம்