Annai Bhoomi |
---|
அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்
அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
கதிர் ஓர் முழம் இருக்கும்
கட்டி அடித்தால் கலம் இருக்கும்
கதிர் ஓர் முழம் இருக்கும்
கட்டி அடித்தால் கலம் இருக்கும்
அதிலோர் மணி நெல்லும்
யார் உழைத்தார் எனச் சொல்லும்
அதிலோர் மணி நெல்லும்
யார் உழைத்தார் எனச் சொல்லும்
வரப்பே தலகாணி
வைக்கோலே பஞ்சு மெத்தை
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு
உழைப்பே மூலதனம்
உரிமையில்லா ஏழை ஜனம்
உழைப்பே மூலதனம்
உரிமையில்லா ஏழை ஜனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்
அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்