Annai Madiyil Male |
---|
இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
பிறந்த தொப்புள்கொடி அருந்த வேளையில்
உறவும் அறுந்ததா அன்னையே
பிறப்பும் பாலிலே இறப்பும் பாலிலே
மனது மறக்குமா உன்னையே
பாதி தூக்கத்தில் கலைய ஞாபகம்
மறந்து போனதே உனது பூமுகம்
தேடி திரிகிறேன் தேசமெங்கும்
சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்
தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்
வானின் முடிவையும் வாழ்வின் முடிவையும்
வகுக்க முடியுமா மகனே
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே
ஓடும் மேகமே உனக்கு புரியுமா
தாயின் முகவரி உனக்கு தெரியுமா
உயிரை பிரிந்துமே ஜீவிதமா
சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்
தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்
சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள்
தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்