Annaiyai Pol Oru Dheivam Illai

Annaiyai Pol Oru Dheivam Illai Song Lyrics In English


பத்து மாதம்
சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய்
விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினியில் நாம் வாழ செய்தாள்
ஆஆஆஆ

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே
ஏஏஏ
ஆஆஆ
துன்பமும் தொல்லையும்
ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும்
கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்


அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

நாளெல்லாம் பட்டினியாய்
இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி
பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே
மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்
ஆஆஆஆஆ

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை