Annaiyendru Aagum Munnae

Annaiyendru Aagum Munnae Song Lyrics In English


அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

முத்துச் சிப்பி கன்னத்திலே
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா

தெள்ளு தமிழ் சோலையிலே
கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த
பிள்ளைக் கவி பாடவா கண்ணா
கண்ணா பேசு தமிழ்
பேசவா கண்ணாஆஅஆ

அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்


மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே

பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா

அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ