Annaiyendru Aagum Munnae |
---|
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
முத்துச் சிப்பி கன்னத்திலே
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
தெள்ளு தமிழ் சோலையிலே
கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த
பிள்ளைக் கவி பாடவா கண்ணா
கண்ணா பேசு தமிழ்
பேசவா கண்ணாஆஅஆ
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ