Annana Vittu

Annana Vittu Song Lyrics In English


அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா

அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா

சிந்தையில் வைத்த
அண்ணன்தான்
பந்தலில் நிக்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா

அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா

யாருக்கு என்ன தீங்கு செய்தேன்
ஏன் இந்த சோதனை
தங்கச்சிக்குதான் தெரியும்
அண்ணனின் வேதனை

சொந்தங்கள் எல்லாம் போயாச்சு
சொப்பனம் போலே ஆயாச்சு
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு
பட்டது போதும் என்றாச்சு

மங்கள வாத்தியங்கள்
ஊருக்குள் முழங்குது
இங்கிருந்து என் மனம்
வாழ்த்துக்கள் வழங்குது

அண்ணன் இங்கே தேடுமோ
கண்ணீரிலே ஆடுமோ
அந்நாளிலே நான் வளர்த்த
வண்ணக்கிளி வாடுமோ

அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமாஆ


நேசம் வெச்ச பாவத்துக்கு
நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அழிச்சாலும்
நீங்குமா தலை விதி

என் விதி இப்போ என்னோடு
யாரிடம் சொல்ல என் பாடு
கற்பனை செய்து கண்ணோடு
கட்டியதெல்லாம் மண் வீடு

ஊருக்கே பாடம் சொல்லும்
வாத்தியார் வீட்டு பிள்ளை
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்
சரிவர படிக்கவில்லை

நேரம் ஒன்று உண்டாகும்
எல்லாம் அன்று நன்றாகும்
ஒண்ணாகத்தான் நாம் இருக்க
பின்னால் ஒரு நாள் வரும்

அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா

சிந்தையில் வைத்த
அண்ணன்தான்
பந்தலில் நிக்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா

அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா