Annanmaar Kathai |
---|
அனிதா கார்த்திக்கேயன்
ஆண் ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ பூஞ்சரங்க சரம் சரமா
மஞ்சளும் மாவிலையோட
ஏ பொன்னரு சங்கரு பூசைக்காக
பொன்னாளில் ஒண்ணு கூட
பெண் ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
பெண் ஹேய் காஞ்ச மண்ணில்
பேய்ஞ்ச மழையில் காஞ்ச கருத அறுத்து
ஹேய்ய் வாங்கடியோ பொண்டுகளா
பொங்க வெச்சு படைப்போம்
பெண் ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
ஏ தன்னே தன்னே தானே தன்னே
தானே தன்னே தானே
அண்ணம்மாரு கதைய சொல்லப் போறேன்
அண்ணன் தம்பிமாரே
அண்ணம்மாரு கதைய சொல்லப் போறேன்
அண்ணன் தம்பிமாரே
ஆண் அண்ணம்மாரு கதைய சொல்லப் போறோம்
அண்ணன் தம்பிமாரே
சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
கட்டி விட்டுச் சொன்ன கட்டுக் கதையும் இல்ல
நம்ம மண்ணில் நடந்தது சத்தியம் பொய்யும் இல்ல
நெஞ்சு நிமிந்து நில்லு
அண்ணம்மாரே கும்பிட்டு கூடி நில்லு
ஆண் நெஞ்சு நிமிந்து நில்லு
அண்ணம்மாரே கும்பிட்டு கூடி நில்லு
ஆண் மற்றும்
அண்ணம்மாரு கதைய சொல்லப் போறோம்
அண்ணன் தம்பிமாரே
சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
பெண் தங்கம் வெளையிற பூமியில் பொறந்த
தாமர நாச்சிக்கு தாலி கட்ட
நம்ம தாமர நாச்சிக்கு தாலி கட்ட
தாய் மாமன் தல மறஞ்சிருக்க
மந்த ரகமான புத்தி கொண்ட அந்த
மாந்தியப்பன் கட்ட நாள் குறிச்சான்
கெட்ட மாந்தியப்பன் கட்ட நாள் குறிச்சான்
பெண் தாலி கட்டும் நாளில் மாறு வேடத்துல
தாய் மாமனும் தன்னைக் காட்டிடவே
தாய் மாமனும் தன்னைக் காட்டிடவே
தன்னை ஏமாத்தின தாய் தந்தையர் மேல
தாமர நாச்சியும் கோபம் கொண்டா
தாமர நாச்சியும் கோபம் கொண்டா ஆ ஆ
கட்டுனா மாமனத் தான் கட்டுவேன்
இல்லேனா கட்டையில போகணும்னா
தாய் மாமன் கட்டுன தாலியும்
ஆண் தாமர நாச்சி கழுத்துல ஏறிச்சய்யா
மாந்தியப்பனோடு அப்பனுக்கும்
அவமானத்தால் மதி கெட்டுப் போனதய்யா
தீராத பகை ஒண்ணு மூண்டதய்யா
ஆண் தீராத பகை ஒண்ணு மூண்டதய்யா
அந்த பழி தீர்க்க
சதி கூட்டம் சேர்ந்ததய்யா
அண்ணம்மாரு கதைய சொல்லப் போறேன்
அண்ணன் தம்பிமாரே
சொல்லக் கேக்கும் புண்ணியம்
வந்து சேரும் சொல்லுறதக் கேளேன்
தாமர நாச்சியின் வாரிசுதான்
அந்த தங்கமல நாட்ட ஆளுமுன்னு
சாதகத்துக் குறி பூசாரி சொல்ல
பாதகம் செஞ்சிடக் காத்திருக்கு
பெண் தெய்வமே கண் தொறந்து
திக்கில்லாத தீன சனங்கள காப்பதற்கு
திங்களப் போல தென்றலப் போல
தானே பொறந்திட மனசெறங்கி
தாய் மடி கோயிலில் கர்ப கிரகத்தில்
நல்ல நாளில் குடி கொண்டதம்மா
புள்ள வளரும் சேதியுமே அந்த
பொல்லாருக்கும் போயிச் சேந்ததம்மா
தாமர நாச்சிக்கு
பெண் தங்க வள காப்பு தங்க வள காப்பு
பூவப் போல் பொண்ணுக்கு
பெண் பொன்னு வள காப்பு பொன்னு வள காப்பு
ஓரோரு மாதமும்
பெண் ஓர் நாளப் போல் போக ஓர் நாளப் போல் போக
ஓடி ஓடி பத்து மாதம்
பெண் ஆகிப் போனதம்மா ஆகிப் போனதம்மா
பாதகர் கூட்டம் எல்லாம்
பழி வாங்க ஒண்ணு சேந்து
பாவி அந்த பூசாரி பாழான திட்டம் சொல்ல
பேறு காலம் பாக்கப் போன
பேயான பேச்சியிடம்
பச்ச எளங்குருத்த பிஞ்சு பெற நெலவ
பொறக்கும் போதே கொல்லச் சொல்லி
பொன் கொடுத்து போகச் சொன்னான்
புள்ள அழுத சத்தம்
பூமி எல்லாம் கேட்டதம்மா
கள்ளத்தனமா வந்த கிராதகிய கண்டாரம்மா
பொறந்ததோ ஒண்ணு இல்ல
ரெட்டக் கொழந்த அய்யா
மறஞ்சு தான் போனதே மாயமா ஆனதே
என்னாச்சு ஏதாச்சு
யார்க்கும் அது தெரியலையே
உசுரோடு இருக்குதோ
இல்ல ஒழிஞ்சு தான் போனதோ
யாரு சொல்லுவா உண்ம யாரு சொல்லுவா
சேதி நல்லதா செல்லாண்டி அம்மன் சொல்லணும்
அந்தச் செல்லாண்டி அம்மன் சொல்லணும்
ஆன்பச்ச எளங்குருத்தே
பால் நெலவே பன்னீரே
பவள மணி மல்லிகையே
பசுங்கிளியே பனி மலரே
பூவான தொட்டில் இது
எம் மடியில் நீ ஒறங்கு
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ