Annanukku Annanmaarae |
---|
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
மணப்பந்தலிலே மேளங்கொட்டி
பூ முடிச்சி தாலிக்கட்டி
சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
கண்ணாலம் கட்டிக்கிட்டு அண்ணே அண்ணே
ஒரு புண்ணாக்கும் லாபமில்லே சொன்னேன் சொன்னேன்
அன்னாடம் ஆசை வச்சி அண்ணே அண்ணே
ஒண்ணும் ஆகாம பொத்திக்கிட்டு நின்னேன் நின்னேன்
பொங்கி வச்ச சோறிருந்தும் திங்கலையா
பொத்தி வச்ச ஆசை பசி தீரலையா
சொல்லி சொல்லி சோக கதை மாளல்லியே
முற்றுப்புள்ளி வச்சிடத்தான் ஆளில்லையே
என்ன செய்ய மாலை சூடி
அட இன்னமும் நான் பிரம்மச்சாரி
துக்கம் தொண்டை அடைக்க
அதில் மண்டை கொதிக்க
இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
சம்சாரம் வாச்சுப்புட்டா ஜோரு ஜோரு
அது சொன்னத கேட்காவிட்டா போரு போரு
பக்கத்தில் கேக்கும் கேக்கும் கட்டில் சத்தம்
எங்க வீட்டுக்குள் நாங்க மட்டும் ரொம்ப சுத்தம்
பிள்ள ஒன்னு பெத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்
கொண்டவளே கொஞ்சி கொஞ்சி தோளைத் தொட்டேன்
கூடிழந்த குஞ்சி போலே
சோகம் கூடுதய்யா நெஞ்சி மேலே
இதில் சொல்லுறதென்ன வாய மெல்லுறதென்ன
நம்ம சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
மணப்பந்தலிலே மேளங்கொட்டி
பூ முடிச்சி தாலிக்கட்டி
சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே