Antha Kanji Kalaiyatha

Antha Kanji Kalaiyatha Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலேஏ இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே

தொங்கும் மணி கட்டும் தேரா பொங்கும் மணிமுத்து ஆறா மச்சான் மனசள்ளி ஜோரா மின்னல் இடை வெட்டி போறா

கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே

புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா

கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடணும் அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்

உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே வளையல் கைய வளச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே

நெஞ்ச துருவி துருவி துளையப் போட்டு பருவ பசிய ஊட்டுறியே

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலேஏ உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலேஏ


மண் வீடு கட்டி விளையாடும் பருவம் போனது போனது போனதடி அது போனது போனது போனதடி நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம் வந்தது வந்தது வந்ததடி அது வந்தது வந்தது வந்ததடி இது சரியான ஜோடி விலகாது கூடி இனியும்ஓஓஓஓஓ

மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன் உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்

இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன் உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் ரொம்ப பாடுபட்டுருக்கேன்

காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம் கழுத்தில் மூணு முடிய போட்டா பேசாது சாதிசனம் இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலேஏ உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலேஏ

தொங்கும் மணி கட்டும் தேரு பொங்கும் மணிமுத்து ஆறு பதியம் போட்டாலே மாது இங்கே உன்னை விட்டா யாரு

கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலேஏ இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலேஏ