Arasana Nambi

Arasana Nambi Song Lyrics In English


அரசன நம்பி
புருசன விட்டுப் புட்டா
பெண் ஒருத்தி
பறந்தத நம்பி
இருந்தத விட்டுப் புட்டா
செம்பருத்தி
ஆசையினாலே அவதி பட்டா
அறிவும் கெட்டு அசிங்கப் பட்டா
படி தாண்டிப் போனா போனதுதான்டி

ஓ ஓ
உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா
பட்டுத்தான் மனம் மாறி வந்து இருக்கேன்
என்ன ஏத்துக்க வேணுமையா சின்ன ராசா

பெண் புத்தி எல்லாம் பின் புத்தி
அத சும்மாவா சொன்னான் ராசாத்தி
சஞ்சலம் உள்ள உம் புத்தி
அத சேக்காது இங்கே எம் புத்தி
அடி வேணாமே உன் சங்காத்தமே

உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா

பொண்ணுக்கழகாகும் பூவும் பொட்டும்
காசு பணம் எந்த மட்டும்
கொண்டவன் பாசமும் நேசமும் தான்
கூட வரும் உள்ள மட்டும்

அக்கரை எல்லாம் பச்சையின்னு
தப்புக் கணக்கு போட்டேனய்யா
அக்கரை எல்லாம் பச்சையின்னு
தப்புக் கணக்கு போட்டேனய்யா
நாலும் கெட்டுக் கெட்டு நாளும் புத்தி சொல்ல
போதும் போதும் தாங்க மாட்டேனய்யா

உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா
பட்டுத்தான் மனம் மாறி வந்து இருக்கேன்
என்ன ஏத்துக்க வேணுமையா சின்ன ராசா

பெண் புத்தி எல்லாம் பின் புத்தி
அத சும்மாவா சொன்னான் ராசாத்தி
சஞ்சலம் உள்ள உம் புத்தி
அத சேக்காது இங்கே எம் புத்தி
அடி வேணாமே உன் சங்காத்தமே


உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா

பாரதக் கத சொல்லும் சூதாட்டத்தில்
தாரத்த வச்சான் தர்மனும் தான்
பாரத்தப் பங்கிடும் தாரம் நீயோ
பணத்துக்கு வித்த புருஷனத்தான்

அம்மான்னு ஏங்கிடும் பிள்ளைக்கெல்லாம்
அம்மாவா இல்ல நான் சும்மாருந்தேன்
அம்மான்னு ஏங்கிடும் பிள்ளைக்கெல்லாம்
அம்மாவா இல்ல நான் சும்மாருந்தேன்
ஆட்டிப் படச்சிட்ட ஆசை எனும் பேயி
ஓடிப் போச்சு ஒன்னத் தேடி வந்தேன்

தாலிக்கு மரியாத
தந்தாத்தான் பொண்ணு
இல்ல தன்மானம் பறி போகும் மகராசி
வீட்டுக்கு வெளக்கேத்த வந்த
கண்ணான கண்ணு
அந்த வழக்கத்த விட்டுப் புட்டா சுகவாசி

பெண் புத்தி எல்லாம் பின் புத்தி
அத சும்மாவா சொன்னான் ராசாத்தி
சஞ்சலம் உள்ளது எம் புத்தி
அத சேக்காது இங்கே எம் புத்தி
அடி வேணாமே உன் சங்காத்தமே

உன்னத்தான் மல போல நம்பி இருக்கேன்
என்ன மன்னிக்க வேணுமையா மகராசா