Arul Mazhai Pozhiyum |
---|
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையின் போது
உன் திரு வாசல் வருகிற மாது
இன்றைய நாளில் வரமுடியாமல்
ஏக்கத்தினாலே கலங்குது பாரு
மாவிளக்கேத்தி படைத்திடும் வேளை
நானதை காண வழியில்லை தாயே
நானதை காண வழியில்லை தாயே
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
மாமலை நீயே மாவிலை சூலி
மகிஷனை மாய்த்த மாபெரும் காளி
குருபரன் பாட்டை காதினில் கேட்டு
தரிசனம் தந்தாய் தாளங்கள் போட்டு
என் நிலைக் கண்டு இரக்கமும் கொண்டு
நீ வரவேண்டும் நேரினில் இன்று
நீ வரவேண்டும் நேரினில் இன்று
அருள் மழை பொழியும் அன்னை ஈஸ்வரி
எந்தன் நெஞ்சில் உள்ளக் குறை நீ அறிவாய்
பார்வதி தாயே கருணை செய்வாயே
எனக்கோர் துணையாய் நீ இருப்பாய்