Arule Arul |
---|
பெண் அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
அமுதே அதன் சுவையே
அன்பின் இசையே தினம் தொழுதோம்
பெண் சங்கரி சுந்தரி சௌந்தரி
அய்கிரி நந்தினி
ஆகிடும் திரிபுரையே அருள் மறையே
சாத்திரம் போற்றிடும் சாம்பவி
சங்கடம் தீர்த்திடும் பைரவி
பெண் ஷ்யாமளையே அருள் உமையே
திருநாள் இந்தத் திருநாள்
உனை தொழும் நாள்
அருள் பெறும் நாள்
பெண் அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
பெண் மறந்த எம்மை மறந்திடாது
காக்கும் கரங்கள் உனது
வரம் தராது எமக்கு ஏது
அருள் நிறைந்த உலகு
பெண் தேடிடும் அடியவர்க்கிறங்கி
திருவடி தரிசனம் தா
சாத்திரம் போற்றிடும் சாம்பவி
சங்கடம் தீர்த்திடும் பைரவி
அருள் உமையே ஓம்
பெண் அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
அமுதே அதன் சுவையே
அன்பின் இசையே தினம் தொழுதோம்
பெண் மனித குலமும் இனிது வாழ
கடைக் கண் பார்வை காட்டு
துரத்தும் வறுமை தொடரும் துயரம்
நெருங்கிடாமல் ஓட்டு
பெண் உலகங்கள் முழுவதும் கலகம்
அது தொலைந்திட வழி ஒன்று தா
மங்கல மங்கள நாயகி
மாதவி மாதவன் சோதரி
அருள் புரிவாய் ஓம்
பெண் அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
அமுதே அதன் சுவையே
அன்பின் இசையே தினம் தொழுதோம்
பெண் சங்கரி சுந்தரி சௌந்தரி
அய்கிரி நந்தினி
ஆகிடும் திரிபுரையே அருள் மறையே
சாத்திரம் போற்றிடும் சாம்பவி
சங்கடம் தீர்த்திடும் பைரவி
பெண் ஷ்யாமளையே அருள் உமையே
திருநாள் இந்தத் திருநாள்
உனை தொழும் நாள்
அருள் பெறும் நாள்
பெண் அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்