Arumbum Thalire

Arumbum Thalire Song Lyrics In English


அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

மானாடும் மீனேஏ
நீதானே வேண்டும்
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்

அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரே

இனிமையான பொன் மாலை வேளை
வலை ஒசை தூது வந்ததே
இளைய ராணி வரும் நேரம் என்று
இனிப்பான சேதி சொன்னதே

பூ மாலை நீ சூடவே
பாவையாய் மண்ணில் தோன்றினேன்

என் ஜீவன் நீயாகவே
எனதெல்லை நானும் தாண்டினேன்

வானும் பூமி
வாழும் காலம்
நானும் நீயும் வாழலாம்

அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

மானாடும் மீனேஏ
நீதானே வேண்டும்
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்


தலைவனாக நீ வேண்டும் என்று
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
குழல் மீது பூவை சூட்டினேன்

தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்
தேடி வாடினேன்

நான் சூடும் நூலாடையாய்
உனைத் தானே நாளும் சூடினேன்

ராஜ ராஜன் கூடும்போது
ராஜ யோகம் வாய்த்தது

அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
மலரும் மனமே
மனம் ஏந்திடும் கனியே
கனிப் ​பாவையே ​

மானாடும் மீனேஏ
நீதானே வேண்டும்
பூ நாடும் உயிரே
நீதானே வேண்டும்

அரும்பும் தளிரே
தளிர் தூங்கிடும் பனியே
பனித் தூய்மையே
அரும்பும் தளிரேஏ