Athi Mara Poovidhu |
---|
ஆ ஹாஆஆஹா
ஆ ஹாஆஆஹா
ஆ அஹ்ஹஹா அஹ்ஹஹா ஆ ஆ
ஆ ஆ ஆஆஆஹஹா
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
புன்னகையில் புது கவிதைகள் எழுதிட
பார்வைகள் மலர மலர
மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட
பாதங்கள் அசைய அசைய
வந்த மகள் ஒரு பூங்கொடி
வண்டு துளைத்திடும் மாங்கனி
சந்த மொழிகளின் காவியம்
சிந்தை மயக்கிடும் ஓவியம்
கோடை வரும் நாள் வீசும் வாடை நான்
வாடை வரும் நாள் சூடும் போர்வை நான்
மல்லிகையைச் சூடி மந்திரங்கள் பாடி
பருவம் நடனம் பயிலும் நளினம்
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம் தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட
பாவங்கள் விளைய விளைய
கையளவு இடை நெளிந்திட நெளிந்திட
பூவுடல் வளைய வளைய
கண்ணின் இமைகளில் ஆடிடும்
எண்ண கனவுகள் ஆயிரம்
இந்த குல மகள் நூதனம்
அந்த கலை மகள் சீதனம்
பாடல் இருந்தால் ராகம் சேராதோ
ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ
திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி
விழியில் கலந்து வழியும் வடிவம்
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம் தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது