Aval Paranthu Ponale |
---|
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
என் காதுக்கு
மொழியில்லை என்
நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கும்
உறக்கமில்லை
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
இந்த வீட்டுக்கு
விளக்கில்லை சொந்தக்
கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகள் இல்லை
ஒரு ஆறுதல்
மொழியில்லை
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
என் இதயத்தில்
பூட்டிவைத்தேன் அதில்
என்னையே காவல்
வைத்தேன் அவள்
கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
அவள் எனக்கா
மகளானாள் நான்
அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்து
கொண்டால்
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே