Avan Thotatha Pookkal

Avan Thotatha Pookkal Song Lyrics In English


மற்றும் டி எல் மகாராஜன்

அவன் தொடாத பூக்கள்
இன்று வாடி விட்டது
அவள் மோக மூச்சு
இன்று சென்று தீயை சுட்டது

கண்ணில் தேங்கும் விரகம்
இங்கே நகர மறுக்கும் நரகம்
இருவருக்கும் இடையில்
ஒரு சோக மேகம் உலவும்

மங்கல செல்வி குங்குமம் அன்று
அந்நிய வேர்வையால் அழிந்து போனது
சாய்ந்து கிடந்த சந்தன மாலையை
குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன

பாயில் கிடந்த பாரிஜாதத்தை
நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன


நியாயம் கேட்ட ஏழை புலியை
தின்று தீர்த்தது நெருப்பு
யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு

இவர்கள் வினை விதைத்த கயவர்கள்
வேட்டி கட்டிய நெருப்புகள்
இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள்
கண்ணைக் கொத்தும் பாம்புகள்

இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால்
தர்மம் இங்கே தற்கொலை புரியும்
அழுத மக்களே எழுந்து நில்லுங்கள்
தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள்

நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்