Avan Thotatha Pookkal |
---|
மற்றும் டி எல் மகாராஜன்
அவன் தொடாத பூக்கள்
இன்று வாடி விட்டது
அவள் மோக மூச்சு
இன்று சென்று தீயை சுட்டது
கண்ணில் தேங்கும் விரகம்
இங்கே நகர மறுக்கும் நரகம்
இருவருக்கும் இடையில்
ஒரு சோக மேகம் உலவும்
மங்கல செல்வி குங்குமம் அன்று
அந்நிய வேர்வையால் அழிந்து போனது
சாய்ந்து கிடந்த சந்தன மாலையை
குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன
பாயில் கிடந்த பாரிஜாதத்தை
நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன
நியாயம் கேட்ட ஏழை புலியை
தின்று தீர்த்தது நெருப்பு
யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு
இவர்கள் வினை விதைத்த கயவர்கள்
வேட்டி கட்டிய நெருப்புகள்
இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள்
கண்ணைக் கொத்தும் பாம்புகள்
இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால்
தர்மம் இங்கே தற்கொலை புரியும்
அழுத மக்களே எழுந்து நில்லுங்கள்
தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்