Avanum Avalum Manathum |
---|
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா
கண்கள் அசையும் கைகள் இணையும்
பெண்மை மிரளும் உடனே தளரும்
மோகம் என்றால் இதுதானா
தொட்டால் போதும் துள்ளும் மேனி
அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா
ஒரு மேடை இருக்கும் பெண் ஆடத் தொடங்கும்
அது நாணமில்லாமல் ஆடை எடுக்கும்
அந்த தேகம் குலுங்கும் அதில் வேகம் பிறக்கும்
அங்கு தாளாத ஆசை ஆளை மயக்கும்
நடனம் வளரும் பலரும் தொடரும்
முடியும் பொழுதில் பொழுதும் விடியும்
ஆடல் என்றால் அதுதானா
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா
அவன் கூட்டில் அடைப்பான் பின்பு வாட்டி எடுப்பான்
அலங்கோலம் கொண்டாடி ஆடைப் பறிப்பான்
அவள் கையை முறிப்பான் இளம் கன்னம் கடிப்பான்
அவள் கண்ணீரில் நீந்தி கற்பை கெடுப்பான்
மனதில் தெளிவு உடலில் உறவு
முதலில் மனிதன் முடிவில் மிருகம்
காதல் வெறியின் கதை இதுதான்
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா
கண்கள் அசையும் கைகள் இணையும்
பெண்மை மிரளும் உடனே தளரும்
மோகம் என்றால் இதுதானா
தொட்டால் போதும் துள்ளும் மேனி
அதை சொல்லுபோது இன்பம் தோன்றும்
அவனும் அவளும் மனதும் மனதும்
இணையும் உறவு மலரும் இரவு
காதல் என்றால் அதுதானா