Ayyaho Saamiye |
---|
பாடல் ஆசிரியர் : மதுர கவி
ஓ ஓ ஓ ஓ சாமியே
மண்ண மண்ண இந்த மண்ண சாமி நீ படச்ச எங்க போயி நீ ஒளிஞ்ச சாமியே
ஒடம்பு பையில உசிர அடச்சு இங்க அனுப்பி வெச்ச விதி ஊசி குத்தி உடச்ச அய்யஹோ சாமியே
சிரிக்க வெச்சு அழுக வெச்ச வேத தாரியே பறக்கும் போது சிறக ஒடச்ச பீட தாரியே
ஹோ ஹோ புனிதமான பிறப்புக்கு நோவு வருவது ஏன் மனிதமான பிறவிக்கு சாவு தருவது ஏன் ஓஓஓஓ
ரணங்களாய் கிடக்குது ராஜனிலா புவியே சனங்களோட மனசுல அப்பு சாமியே ஓ ஓ
உள்ளம் யாவும் வாழுற ஒரு மனித குல ரூபன் இல்லந்தோறும் அருளுற ஒரு புனித ஜெப தீபன்
அய்யஹோ அய்யஹோ இந்த சாமி பூமி விட்டு அய்யஹோ அய்யஹோ அப்பு சாமி போயிடுச்சோ சொல்லு சாமியே
ஹோ ஹோ புனிதமான பிறப்புக்கு நோவு வருவது ஏன் மனிதமான பிறவிக்கு சாவு தருவது ஏன்
எல்லய காத்த அப்பு சாமி கொள்ளையும் போனதே கல்லாக வாழும் வான சாமி கொண்டுதான் போனதே
ஓ ஓ