Ayyathorai

Ayyathorai Song Lyrics In English


கோவில் குளம்
கண்டதில்லை இப்படி ஓர்
சாமி புண்ணியம் தான்
செஞ்சிருக்கு தென்காசி
பூமி

வானம் தேஞ்சு
போச்சு பூமி காஞ்சு
போச்சு ஏழை எங்கள
ஏமாத்தி

கிழக்கு இருட்டி
போச்சு மேக்க மறைஞ்சு
போச்சு காலம் எங்கள
ஏமாத்தி

மண்ணோடு
மக்களையும் தத்தெடுத்த
ராசா இன்னொருக்க
எங்களைத்தான்
பெத்தெடுத்த ராசா

அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை

ஊருக்குள்ள ஆறு
வந்து ஏறு பூட்டதான்
சொல்லுதய்யா தெருக்குள்ள
சாமி வந்து காப்பு கட்டத்தான்
கேக்குதய்யா

நெல்ல வெதைச்சு
பார்த்தா இப்போ சோறு
விளையுது ஆத்தா புல்ல
வெதைச்சு பார்த்தா இப்போ
எள்ளு விளையுது ஆத்தா

கண்ணுக்கெட்டும்
தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம்
துன்பம் ஏதும் இல்ல

அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை


பாறை கல்லும்
பாதம் பட்டு பச்ச நீளம்
ஆனதே பட்டினியும்
தூரமாக ஓடி போனதே

தூர பட்டு பட்ட
போல எங்கள் நெஞ்சு
ஆனதே தொண்டை
குழி தாகம் தீர்ந்து
ஈரம் ஆனதே

ஆஹா ஆ

பூமியிலும் களவு
வரும் உங்கள் நட்புல
பழுதில்லையே பசும்
பாலும் கர வடியும் உங்க
உறவில குறை இல்லையே

வெள்ள வேட்டி
கட்ட நல்ல வெள்ள
உள்ளம் வேணும் உங்க
முகத்த கண்டா எங்க தாய
போல தோணும்

நல்லதையும் செய்ய
கைய நீட்டும் சாமி உள்ளதையே
சொல்ல வாய் திறக்கும் சாமி

அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை

அய்யாதுரை நீ
பல்லாண்டு வாழனும்
அய்யாதுரை

Tags