Azagana Puli Mane |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
அழகான புள்ளிமானே அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம் ஓ ஆறுமுடிச்சு அவமானம்
அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே
அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிர காவல் காக்க யாரும் இல்லீங்க வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே வக்கீலுக்கு பீஸு என்ன மானம்தானே
அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே
வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது நீ தோலை பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தானே
அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே
மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா நான் கண்ணீராலே கழுவி பார்த்தா கருப்பும் மாறாதா நெஞ்சுக்குள்ளே முள்ளு தச்சு வாடும்போது நாக்குக்ள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது
அழகான புள்ளிமானே அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம் ஓ ஆறுமுடிச்சு அவமானம்
அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே