Azhagaga Kannukku |
---|
அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
நினைவாக ஆஆ
பெண்ணின் நினைவாக
இங்கே கண்கள் நான்கும்
மயங்குமா பெண்ணின்
நினைவாக ஆஆ பெண்ணின்
நினைவாக
மோக கவிதைக்கு
முன்னுரை தீட்டிடும் நாத
சலங்கைகள் கொண்டு மலர்
செண்டு மனம் கண்டு
முத்து பதித்த ஒரு
இரத்தின பல்லக்கு வந்தது
போல் வந்து நின்று வட்டம்
இடுவதை தட்டி பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு
அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக
நீருண்ட
மேகத்தின் ஊர்வலம்
போல் வந்து சீர்கொண்ட
கூந்தலை கண்டு மது
உண்டு மனம் கொண்டு
மஞ்சள் முகத்தினில்
மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும்
ஜோதியில் நின்று தஞ்சம்
அடையவும் தம்மை மறக்கவும்
கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு
அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக