Azhagana Ilamangai |
---|
அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்
அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
திருமண மேடை
என்பதில் தொடங்கி
பிள்ளைகள் செல்வம் காண்பது வீடு
பிள்ளையில் தொடங்கி திருமணமாகி
இல்லறம் காணும் இவளது வாழ்வு
தெய்வமேஆஅஆஅஆ ஹா
தெய்வம் உண்டு என்பதைத்தானே
நீ உரைத்தாய்
கை கொடுத்தாய்
வாழவைத்தாய்
அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
காவிரி தண்ணீர் கலங்கிய நிலையில்
ஓடைகள் ஆக ஓடிய நேரம்
கோவிலில் ஒருவர் வாரி எடுத்து
புனிதம் இது என்றார் பிறந்தது நேரம்
ஊமை நான் ஆஆஅஹாஆ
ஊமையாவே நான் இருந்தேனே
நீ சிரித்தாய் கை கொடுத்தாய்
வார்த்தை தந்தாய்
அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
கனவுகள் எல்லாம் ஒருவடிவாகி
கை கால் முளைத்து வளர்ந்தது பிள்ளை
மலடியின் வயிற்று மைந்தனைப்போலே
மண்டலம் ஆளும் அரசனுமில்லை
அன்னை நான்ஆஅஆஹாஆ
அன்னையாக ஆசைகொண்டேனே
நீ சிரித்தாய்
கை கொடுத்தாய்
வாழ வைத்தாய்
அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்