Azhagana Kolaikaari |
---|
அழகான கொலைகாரி
கொலைகாரி சுகமான சதிகாரி
சதிகாரி உயிரே போகாமல் நீ
என்னை கொன்றாயே
அசைந்தாடும் சிலையா
நீ மனம் பாக்கும் அலையா நீ
வலையே வீசாமல் என்னை
நீ அள்ளி சென்றாயே
ஒரு நொடியில்
உன்னாலே எரிமலையில்
வெந்தேனே மறு நொடியில்
தன்னாலே பனி துளியில்
நின்றேனே
அழகான கொலைகாரி
கொலைகாரி சுகமான சதிகாரி
சதிகாரி உயிரே போகாமல் நீ
என்னை கொன்றாயே
என்னை நானும்
தேடி தேடி காணாமல்
போனேன் உன்னை காணும்
நேரம் எல்லாம் நான் என்னை
கண்டேன்
இமை ரெண்டும்
கண்ணை குத்தும் விந்தைகள்
பார்த்தேன் மழை தூறல் தீயாய்
தீண்டும் மாயங்கள் கண்டேன்
பூவின் மீது இடியை
போலே நெஞ்சில் உந்தன்
எண்ணம் மோத நூறாய்
சுக்கு நூறாய் நானே ஆகி
போனேன்
இரவுகளில் ஏதேதோ
கலவரத்தில் வேர்த்தேனோ
இருதயத்தில் பூ பூக்கும்
அதிசயத்தை பார்த்தேனோ
அழகான கொலைகாரி
சுகமான சதிகாரி உயிரே
போகாமல் நீ என்னை
கொன்றாயே
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
மலர் ஒன்று மனதை
கிள்ள நான் வாடி நின்றேன்
மயில் தோகை புயலை வீச
நான் ஆடி போனேன்
ஆஹா கடிகார
முள்ளாய் உன்னை நான்
சுற்றி வந்தேன் கணம் நேரம்
மரணம் ஒன்றை கண் பார்க்க
கண்டேன்
ஏக்கம் தந்து தூக்கம்
தின்றாய் தாகம் தந்து தள்ளி
நின்றாய் தேளாய் கொட்டும்
தேளாய் ஆனாய் நீயும் ஆனாய்
தனிமையிலே நான்
நின்று கதறும் படி செய்தாயே
கனவுகளில் நீ வந்து கன்னி
வெடி வைத்தாயே
அழகான கொலைகாரி
கொலைகாரி சுகமான சதிகாரி
சதிகாரி உயிரே போகாமல் நீ
என்னை கொன்றாயே
அசைந்தாடும் சிலையா
நீ மனம் பாக்கும் அலையா நீ
வலையே வீசாமல் என்னை
நீ அள்ளி சென்றாயே
ஒரு நொடியில்
உன்னாலே எரிமலையில்
வெந்தேனே மறு நொடியில்
தன்னாலே பனி துளியில்
நின்றேனே