Azhagennum Oviyam |
|---|
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
காமன் கலைக்கோர் கல்லூரி
கண்டேன் இரு விழியில்
கவி கம்பன் எழுதா பாட்டெல்லாம்
கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல்
சிந்தும் குறு நகையில்
நான் மூன்றாம் தமிழை பார்க்கிறேன்
கண்ணே உந்தன் இடை அசைவில்
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
என்றும் இளமை மாறாமல்
வாழும் சரித்திரமே
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும்
எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை
சொல்லில் வருவதில்லை
நான் உன்னால் அடையும் பேரின்பம்
அந்த சொர்க்கம் தருவதில்லை
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
