Azhagiya Nadhi Enna |
---|
அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேகம் தான் மோகத்தில் வாட
நாளும் தான் மோனத்தில் கூட
துள்ளும்அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேடிய தேவதையே
திரை மறைத்து மூடிய மாங்கனியே
ஓடிடும் காவிரியே
உனை நினைத்து பாடிடும் இன்னிசையே
நாயகன் பூ மடி மேல்
நானும் பல நாடகம் ஆட வந்தேன்
மாயவன் குழல் இசையில்
எனது மனம் மயங்கிய நிலை இருந்தேன்
தேரினில் ஏற வந்தேன்
திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன்
ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க
ஓடையில் நீந்த வந்தேன்
கேட்டது யாவையும் நான் தருவேன்
இனி கேள்வி என்ன எனை அணைத்திட
அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
கோடியில் நீ ஒருவன்
பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன்
கூடிடும் என் துணைவன்
எனது மனக் கோவிலில் நீ இறைவன்
ஆடிடும் பெண்ணழகே
ஆசைகளை ஆள்கிற பேரழகே
தூவிய பூ மலர் மேல்
தோளணைத்து தூங்கிடும் தேன் துளியே
வானகம் வையகமும் வாழ்த்த வரும்
நாளினை கேட்டு வந்தேன்
நாளுமே சேர வரும் நாளில் ஒரு
நாட்டியம் ஆட வந்தேன்
மெல்லிய பொன் இடை மேடையிலே
அரங்கேற வரும் தமிழ் மகனடி
அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேகம் தான் மோகத்தில் வாட
நாளும் தான் மோனத்தில் கூட
துள்ளும் அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன