Azhagiya Nadhi Enna

Azhagiya Nadhi Enna Song Lyrics In English




அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேகம் தான் மோகத்தில் வாட
நாளும் தான் மோனத்தில் கூட

துள்ளும்அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன



தேடிய தேவதையே
திரை மறைத்து மூடிய மாங்கனியே
ஓடிடும் காவிரியே
உனை நினைத்து பாடிடும் இன்னிசையே

நாயகன் பூ மடி மேல்
நானும் பல நாடகம் ஆட வந்தேன்
மாயவன் குழல் இசையில்
எனது மனம் மயங்கிய நிலை இருந்தேன்

தேரினில் ஏற வந்தேன்
திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன்
ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க
ஓடையில் நீந்த வந்தேன்

கேட்டது யாவையும் நான் தருவேன்
இனி கேள்வி என்ன எனை அணைத்திட

அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன


கோடியில் நீ ஒருவன்
பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன்
கூடிடும் என் துணைவன்
எனது மனக் கோவிலில் நீ இறைவன்

ஆடிடும் பெண்ணழகே
ஆசைகளை ஆள்கிற பேரழகே
தூவிய பூ மலர் மேல்
தோளணைத்து தூங்கிடும் தேன் துளியே

வானகம் வையகமும் வாழ்த்த வரும்
நாளினை கேட்டு வந்தேன்
நாளுமே சேர வரும் நாளில் ஒரு
நாட்டியம் ஆட வந்தேன்

மெல்லிய பொன் இடை மேடையிலே
அரங்கேற வரும் தமிழ் மகனடி

அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேகம் தான் மோகத்தில் வாட
நாளும் தான் மோனத்தில் கூட

துள்ளும் அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன

விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன