Azhagiya Poongkuruvi

Azhagiya Poongkuruvi Song Lyrics In English


அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி

அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி

கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது காதலே காதலே நீ வாழ்க

அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி

தேகம் இரண்டு பாரம் குறைந்து வானில் பறந்ததுவோ வர வர பூமி மறைந்ததுவோ

காமன் இசைக்கும் நாதஸ்வரத்தின் கீதம் முழங்கியதோ அதில் பல பாவம் விளங்கியதோ

கொடிமலர்கள் செவியினைப் போல் சாய்கிறதோ இரு மனதின் மௌனமொழி கேட்கிறதோ பொன் மாலையிலே பூச்சிந்துதடி பூங்காற்றில் ஒரு தேர் வந்ததடி மின்னும் மலர்விழி சங்கம் அது பல கவிதைகள் வடித்தது இதழ் வரை இனித்தது

அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி


காதலர் பாட்டு காதினில் கேட்டு பாட மறந்தனவோ குயில்களும் காதல் புரிந்தனவோ

ஈருடல் போர்த்து சேர்ந்ததும் காற்று இடைவெளி தேடியதோ நுழைந்திட இடமின்றி வாடியதோ

பூங்கொடியை மாங்கிளைதான் தாங்கியதோ பொன்னுலகம் போக மனம் ஏங்கியதோ நூல் போன்ற இடை ஏன் சோர்ந்ததடி பாலோடு மலர் தேன் சேர்ந்ததடி பச்சை இலைகளில் மெத்தை அதில் பனி துளிகளும் மயங்குது இரவென தயங்குது

அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி

கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது காதலே காதலே நீ வாழ்க

இருவர் : அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி