Azhagiyale |
---|
அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம்
அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலை தூரம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
சொல்லி சொல்வதென்ன விழியோரம்
எனை ஈர்க்கும் பார்வையிலே
புதிரான சிறு துளியே
உயிர் சாய்க்கும் அழகினிலே
அறிதான பெண் அழகே
அடடா விழியில் நுழைந்து
சில்லிடும் வெயிலே
விரலினிடையே சுடர் விடும் மழையே
விழியில் நுழைத்து சில்லிடும் வெயிலே
விரலினிடையே சுடர் விடும் மழையே
மாய துளி போல நீ பேச
கால பெரு வெளியே இளைப்பாரும்
ஆழதுளை போல கூர் விழியா
மாயமென போதை தலைக்கேரும்
நெற்றி முகட்டில் முடிகற்றை இரண்டு
சரிந்து விழும் தூரணை அழகை
அட எப்படி சொல்ல என்னவென்று சொல்ல
ஐய்யயோ அது போல் ஒரு கவிதை
கண் உறங்க காதலி மடி தேடும்
கைதி என ஆவேனோ
சின்னன் சிறு விரலால் நீ மோது
கை குழந்தை நான்தானோ
மௌன தருணம் நீ வீசும்
பார்வைகளும் போதை எனக்கூடும்
தோள்கள் உரசும் காதணியும்
தூண்டுகிற வாடை பரிகாசம்
கட்டில் அறையில் தாபம் தீர்க்கும்
அதிகாலை தலையணை மேலே
ஒற்றை நொடியில் எட்டி தெறிக்கும்
அஃறிணை கோபங்கள் வருமே
நித்தம் ஒரு பிணியில் தடுமாறும்
ஏக்கங்களும் கலைவாயோ
சத்தமிடும் இதயம் துணை தேடும்
ஏகாந்தம் தீர்ப்பையோ
அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம்
அடி சூலி பெண்ணே தூர் அழகே
அள்ளி போவதென்ன தொலை தூரம்
நீலி திமிர் கொண்ட அழகியலே
சொல்லி சொல்வதென்ன விழியோரம்