Azhagu Dheivam |
---|
ஆழியிலே பிறவாத அலைமகளோ
ஆஅஆஅஆஆஆ
ஹாஆஅஆஅஆஹாஆஆஅஆ
ஏழிசையைப் பயிலாத கலைமகளோ
மொழி நடம் புரியாத மலைமகளோ
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோஓஓ
ஆஆஅஆஆஆஆஅஆ
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோஹோஓ
ஆஆஅஆஆஆஆஅஆ
இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
ஆஆஅஹாஆஆஹாஆஆஅஆ
இளநீரை சுமந்திருக்கும்
தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும்
குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில்
வார்த்தை ஏது சொல்ல
ஆஆஅஆஆஆஆஅஆ
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ ஹோ ஓ ஓஒ
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோஹோஓ
ஆஆஅஆஆஆஆஅஆ
தத்தி வரும் தளர் நடையில்
பிறந்ததுதான் தாளமோ
தாவி வரும் கையசைவில்
விளைந்ததுதான் பாவமோ
தெய்வ மகள் வாய் மலர்ந்து
மொழிந்ததுதான் ராகமோ
ஆஆஅஆஆஆஆஅஆ
இத்தனையும் சேர்ந்ததுதான்
இயல் இசை நாடகமோ