Azhagu Nilave |
---|
அழகு நிலவே
கதவு திறந்து அருகில்
வந்தாயே எனது கனவை
உனது விழியில் எடுத்து
வந்தாயே ஒரு பாலை
வனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே என்
பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே இந்த பாவி
உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
சொந்தங்கள்
என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது
யார் தந்தது இன்னொரு
தாய்மை தான் நான்
கண்டது அட உன் விழி
ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகமே
அழுகை தான் ஞானமே
உனக்கும் எனக்கும் உள்ள
உறவு ஊருக்கு புரியாதே
அழகு நிலவே
கதவு திறந்து அருகில்
வந்தாயே எனது கனவை
உனது விழியில் எடுத்து
வந்தாயே ஒரு பாலை
வனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே என்
பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே இந்த பாவி
உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
பூமியை நேசிக்கும்
வேர் போலவே உன் பூ
முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன்
போலவே உன் நேசத்தில்
வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம்
எந்தன் கண்ணீர் துளி
ஒன்றே
அழகு நிலவே
கதவு திறந்து அருகில்
வந்தாயே எனது கனவை
உனது விழியில் எடுத்து
வந்தாயே ஒரு பாலை
வனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே என்
பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே இந்த பாவி
உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே