Azhiyilae Mukkulikkum |
---|
ஆழியிலே
முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்
அழகே
உன் குழலோடு
விளையாடும் காற்றாக
உருமாறி முந்தானை
படியேறவா மூச்சோடு
குடியேறவா
உன் இடையோடு
நடமாடும் உடையாக நான்
மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா
ஆழியிலே
முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும்
அழகே
உன் விம்மென்ற
கன்னத்தில் திம்மென்ற
நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர்
விலை வைக்கவா
உன் உம் என்ற
சொல்லுக்கும் இம்மென்ற
சொல்லுக்கும் இப்போதே
தடை வைக்கவா மவுனத்தில்
குடி வைக்கவா
அகம் பாதி
முகம் பாதி நகம்
பாயும் சுகம் மீதி
மறைத்தாலும்
மறக்காது அழகே
அடிவானம்
சிவந்தாலும் கோடிப்பூக்கள்
பிறந்தாலும் உனைப் போல
இருக்காது அழகே அழகே
அழகே வியக்கும் அழகே