Azhutha Kanneerum Paalaagumaa

Azhutha Kanneerum Paalaagumaa Song Lyrics In English


அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
அதனால் உனது பசி தீருமா
இன்பச் சுமையில் இருந்தவனேஏ
துன்பச் சுமையாய் பிறந்தவனே
துன்பச் சுமையாய் பிறந்தவனே

தாய் ஒரு ஏழை அறியாமல்
துயர் தந்திட வந்தாய் என் மகனே
நீ ஒரு செல்வம் என்றிடுவார்
என் நெஞ்சக் குமுறலைச் சொல்லிடுவாய்

அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா

சின்னஞ்சிறிய குடிசையில் ஒளிச்
சிந்திட வந்த திரு விளக்கே
எண்ணை இல்லாமல் பொன் விளக்கில் சுடர்
ஆடித் துடிக்குதே ஆண்டவனே


அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா

நட்ட நடுத்தெரு ஓரத்திலே
பனி கொட்டிடும் குளிரில் நடுங்குகிறாய்
ஒட்டிய மார்பினில் முகம் புதைத்து
நீ உறங்கிடடா என் கண்மணியே

அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
அதனால் உனது பசி தீருமா