Azhutha Kanneerum Paalaagumaa |
---|
அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
அதனால் உனது பசி தீருமா
இன்பச் சுமையில் இருந்தவனேஏ
துன்பச் சுமையாய் பிறந்தவனே
துன்பச் சுமையாய் பிறந்தவனே
தாய் ஒரு ஏழை அறியாமல்
துயர் தந்திட வந்தாய் என் மகனே
நீ ஒரு செல்வம் என்றிடுவார்
என் நெஞ்சக் குமுறலைச் சொல்லிடுவாய்
அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
சின்னஞ்சிறிய குடிசையில் ஒளிச்
சிந்திட வந்த திரு விளக்கே
எண்ணை இல்லாமல் பொன் விளக்கில் சுடர்
ஆடித் துடிக்குதே ஆண்டவனே
அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
நட்ட நடுத்தெரு ஓரத்திலே
பனி கொட்டிடும் குளிரில் நடுங்குகிறாய்
ஒட்டிய மார்பினில் முகம் புதைத்து
நீ உறங்கிடடா என் கண்மணியே
அழுதக் கண்ணீரும் பாலாகுமா
அதனால் உனது பசி தீருமா
அதனால் உனது பசி தீருமா