Badhil Ondru Tharavendum |
---|
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரேஏ
ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே
அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே
மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என்
மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது
நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது
நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது
அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே