Bavani Varugira

Bavani Varugira Song Lyrics In English


ஆண் ஏ பவனி வருகுறா
பெரிய பாண்டி செல்லாண்டி
ஆத்தா எங்கா ஆத்தா ஹொய்
கரகம் எடுத்து வா
கரகம் எடுத்து வா
கருணையோடு கண் தெறந்து பாப்பா
துன்பம் தீர்ப்பா

பெண் ஆஆஆஆ
கனவில் வந்த காட்சிதான்
கண் முன்னே
கண் வியந்து இங்கு கண்டேன்
நாவில் வந்து நின்று தான் எங்கம்மா
நல்ல சேதி சொல்லக் கண்டேன்
சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே
என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே
சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே
என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே

ஏ பவனி வருகுறா
பெரிய பாண்டி செல்லாண்டி
ஆத்தா எங்கா ஆத்தா ஹொய்
கரகம் எடுத்து வா கரகம் எடுத்து வா
கருணையோடு கண் தெறந்து பாப்பா
துன்பம் தீர்ப்பா

பெண் ஆஆ ஆஆஆஆ ஆஆ

எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு

பெண் லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே

எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே
மருதமல மலைய விட்டு
எறங்குது நீர் மேகமே
மனசை எல்லாம் தழுவி
வந்து கேக்குது நம் ராகமே

ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா
அவ பூ மாரி பொன்னா பொழிவா

எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் கஷ்ட்டப் பட்டு கஷ்ட்டப் பட்டு
காட்டு மேட்டில் ஒழச்சோம்
இஷ்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா

ஆண் இஷ்ட்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா

பெண் கட்டி வெச்ச பஞ்செடுத்து
பட்டெடுத்துப் படைச்சோம்
பட்ட பாடு பஞ்சு போல போகாதா

ஆண் பட்ட பாடு பஞ்சு போல போகாதா

பெண் பச்சமலப் பாரி வெச்சு
பட்டினி நோன்பிருந்தோம்
பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா

பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா

குறிஞ்சி கூத்தாடும் எங்க
தங்க மண்ணுல
குலவ கேட்கின்ற திருநாள்

பெண் யே

ஆண் யே

பெண் யே

ஏ குமரிப் பொண்ணுங்க குளிச்சு
கூந்தல் கட்டி
கரகம் எடுத்து வரும் பெருநாள்


பெண் காப்பு கட்டி கையில கங்கணம் கட்டி
கூத்துப் பாட்டும் தொடங்குமே

ஆண் மேளம் கொட்டி மங்கல மத்தளம் தட்டி
மாட வீதி மகிழுமே

ராவெல்லாம் பூவாணம்
பட்டாசு பலகாரம்

செல்லாண்டி அம்மா ஆசி
சொல்லேண்டி பூவாயி

எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

மல்லிகை மொட்டாகி
மலர்ந்து குலுங்கினா
மணக்கும் பூ மாலை ஆகும்

பெண் யே

ஆண் யே

பெண் யே

மணக்கும் பூ மால
மன்னவன் சின்னவன் என
ஆத்தா தோள் மீதும் ஆடும்

பெண் பூவு போல பொண்ணுங்க பொறப்புதான்
பூப்படஞ்ச பொழுதிலே

ஆண் மாலை போல இடங்கள் மாறலாம்
அம்மன் காட்டும் வழியிலே

யாருக்கு உன் மாலை யாருக்கு என் மாலை

செல்லாண்டி அம்மாதான்
நல் வாழ்வு தருவாளே

எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண் மருதமல மலைய விட்டு
எறங்குது நீர் மேகமே
மனசை எல்லாம் தழுவி வந்து
கேக்குது நம் ராகமே

ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா
அவ பூ மாரி பொன்னா பொழிவா

எடுக்க எடுக்க வரும் புதையல் போல
இருக்கு இருக்கு தேன் பாட்டு
எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே
குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

ஹேய்ஹேய்ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஹோய் ஹோய் ஹாய் ஹோய் ஹோய் ஹோய்