Chandrodayam |
---|
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ
பொன்னோவியம்
என்று பேரானதோ என்
வாசல் வழியாக வலம்
வந்ததோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ
குளிர் காற்று
கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத
கனியல்லவோ
நிழல் மேகம்
தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த
பொருளல்லவோ
எந்நாளும்
பிரியாத உறவல்லவோ
இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை
உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ
இடம் தந்ததோ
இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ
முத்தாரம் சிரிக்கின்ற
சிரிப்பல்லவோ உள் நெஞ்சைத்
தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற
மொழியல்லவோ சந்தோஷம்
வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடி கொண்ட
சிலையல்லவோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ
அலையோடு
பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத
உடல் இல்லையே
துடிக்காத
இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத
இனமில்லையே என் மேனி
உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில்
சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத்
துணை தேடவோ
மலர் மேனி
தன்னை கண்டு
மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற
தமிழ் மண்ணில்
விளையாடவோ
கண் ஜாடை கவி
சொல்ல இசை பாடவோ
இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ
சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ