Chandrodayam

Chandrodayam Song Lyrics In English


சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ

பொன்னோவியம்
என்று பேரானதோ என்
வாசல் வழியாக வலம்
வந்ததோ

சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ

குளிர் காற்று
கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத
கனியல்லவோ

நிழல் மேகம்
தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த
பொருளல்லவோ

எந்நாளும்
பிரியாத உறவல்லவோ
இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை
உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ
இடம் தந்ததோ

இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ



முத்தாரம் சிரிக்கின்ற
சிரிப்பல்லவோ உள் நெஞ்சைத்
தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற
மொழியல்லவோ சந்தோஷம்
வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடி கொண்ட
சிலையல்லவோ


சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ

அலையோடு
பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத
உடல் இல்லையே

துடிக்காத
இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத
இனமில்லையே என் மேனி
உனதன்றி எனதில்லையே

எழிலோடு எழில்
சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத்
துணை தேடவோ

மலர் மேனி
தன்னை கண்டு
மகிழ்ந்தாடவோ

மணக்கின்ற
தமிழ் மண்ணில்
விளையாடவோ
கண் ஜாடை கவி
சொல்ல இசை பாடவோ

இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ

சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ