Characharam Unnai Yaavum |
---|
சராசரம் உன்னை யாவும்
தேடுமே
சராசரம் உன்னை யாவும்
தேடுமே
மறைகளும் மகிழ்ந்துன்னைப்
பாடுமேஹே பிரபோஓஒ
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயாஆஅஆஅஆ
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா
இறங்குவதறிந்திலையா
மறந்திடலாகாதையா
இரவெலாம் கண்ணில்
நீர் அருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரீ என நாவும் கதறும்
ஹரி ஹரீ என நாவும் கதறும்
இதயமும் பதறும் ஐயா
பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயாஆஅஅடைக்கலம் ஐயா