Characharam Unnai Yaavum

Characharam Unnai Yaavum Song Lyrics In English


சராசரம் உன்னை யாவும்
தேடுமே
சராசரம் உன்னை யாவும்
தேடுமே

மறைகளும் மகிழ்ந்துன்னைப்
பாடுமேஹே பிரபோஓஒ
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே

உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயாஆஅஆஅஆ
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா

கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா
இறங்குவதறிந்திலையா
மறந்திடலாகாதையா


இரவெலாம் கண்ணில்
நீர் அருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரீ என நாவும் கதறும்
ஹரி ஹரீ என நாவும் கதறும்
இதயமும் பதறும் ஐயா

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயாஆஅஅடைக்கலம் ஐயா