Chellakkiligalam Palliyiley

Chellakkiligalam Palliyiley Song Lyrics In English


லாலால லாலலால லா
லாலால லாலலால லா
லல லாலாலலாலா லாலாலலா

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா

எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை


தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்

பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை