Chinna Chinna Kanavugal Barama |
---|
இசை அமைப்பாளர் : தினா
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே
எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே
நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே
சுகம் தாளாமலே மனம் தள்ளாடுதே
வரும் ஓசையெல்லாம் எனைத் தாலாட்டுதே
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
ஒரு புறம் நானும் பெருந்தவம் செய்தேன்
இறைவனை நாளும் இதுதான் கேட்டேன்
ஆயிரம் பறவைகள் கிளைகளில் கூடிடும்
தெய்வத்தின் அருளுடன் பூத்தது தாவரம்
வேரிடவே மயில்கள் வருமா
தென்றலும் இனி தாலாட்டுமா
ஸாநிஸரி மபதநிஸ
ஸாநிஸரி மபதநிரிஸ
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்
தங்க மகராசியை சீராட்டுவோம்
சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்
தங்க மகராசியை சீராட்டுவோம்
வெள்ளி மின்னல் வகிடெடுத்து
தாழம்பூவ பின்னுவோம்
வானவில்ல வளையாக்கி கைகளில் சூட்டுவோம்
சிறுமணி பூவின் கருவறை நானா
வெள்ளிப்பனித் துளியிலே முத்தையெடுத்தேனா
தலைமுறை தாங்கிடும் தாய்மையின் பாக்கியம்
இதயத்தை கிள்ளுதே பிள்ளைத்தமிழ் இலக்கியம்
நான் புதிதாய் இன்றுதான் பிறந்தேன்
தனிமரம் நான் தோப்பாகினேன்
ஸாநிஸரி மபதநிஸ
ஸாநிஸரி மபதநிரிஸ
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே
எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே
நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே
ஸரிபமகரி நிஸகநிரிஸா
இருவர் : சின்ன சின்ன கனவுகள் பாரமா
அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா