Chinna Chinna Mazhai Thuligal

Chinna Chinna Mazhai Thuligal Song Lyrics In English


கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
கண் கண் கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது

ஒரு துளி
இரு துளி சில துளி
பல துளி படபட
தடதட சடசடவென
சிதறுது

சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

சிறு பூவினிலே
விழுந்தால் ஒரு தேன்
துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்து எனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே
விழுந்தால் நவதானியமாய்
விளைவாய் என் கண்விழிக்குள்
விழுந்ததனால் கவிதையாக
மலர்ந்தாய்

அந்த இயற்கை
அன்னை படைத்த ஒரு
பெரிய ஷவர் இது அட
இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை
இந்த மழை கண்டறிந்து
சொல்லியது

சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ


ஓஹோ ஓஓஓஓ
ஓஓ ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ ஓ

மழை கவிதை
கொண்டு வருது யாரும்
கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க
வேண்டாம்

இது தேவதையின்
பரிசு யாரும் திரும்பிக்
கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம்
சுரந்த பாலில் ஏன்
நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக்
கரையும்போது மண்ணில்
சொர்க்கம் எய்துவாய்

ஓஹோ ஓ
ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓ ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓ ஹோ ஓஹோ
ஓஓஹோ

சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ