Chinna Kanna |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
அம்மா பேரைச் சொன்னால் போதும்
ஊரே அஞ்சும் அப்போது
ஊரைப் போல நானும் கூட
ஊமைச் சாமி இப்போது
மார்பில் ஊறும் பாலில் வீரம்
சேர்ப்பாள் உந்தன் தாய் தானே
பாலை உண்டு வீரம் கொண்டு
பாயும் சிங்கம் நீ தானே
அப்பன் வீரம் எங்கே போச்சு
காலம் சொல்லும் உன்னோடு
ஆற்றில் ஓர் கால் சேற்றில் ஓர் கால்
என்றே ஆச்சு என் பாடு
வா ராஜா வா வா வாடாத பூவா
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா
அப்பா பாட்டை கேக்கும் கண்ணே
அம்மா பாட்டை கேளாயோ
அப்பா நீ தான் அம்மா நீ தான்
தப்பு யார் மேல் கூறாயோ
வேங்கை மீது வேடன் போட்ட
அம்பை எல்லாம் நான் தானே
வாங்கிக் கொண்டு தாங்கிக் கொண்டு
காயம் கொண்ட மான் தானே
காயம் கொண்ட நன்றிக்காக
தாலிப் பிச்சை கேட்டேனே
காலம் செய்த கோலம் என்று
தந்தை அள்ளிப் போட்டானே
தாயாகி நானே நாளாச்சு கண்ணே
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
தாயின் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
தாயின் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா