Chinna Maharani

Chinna Maharani Song Lyrics In English


சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய் கை வீசும் ஜன்னல்
நிலா நீ வந்த வேளை வாழ்க்கை
பாதை எங்கும் வரவேற்பு மாலை

எங்கள் வீட்டு கடிகாரத்தில்
எல்லா நேரமும் இன்பம் இனி
உந்தன் பின்னால் உந்தன் அன்பால்
எங்கள் உலகம் சுற்றும்

சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்

பெண்ணுக்கென
வாழ்க்கையிலே இலக்கணம்
உள்ளதம்மா விட்டு தரும் குணம்
இருந்தால் இலக்கியம் ஆகும்
அம்மா அனைவருக்கும் இதயத்திலே
ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள்
தான் வாழ்க்கை என்றால்
அவஸ்தைகள் பிறக்கும் அம்மா

அடி வானத்தை அளந்திட
சென்றால் அது முடிகிற காரியமா
அடி வார்த்தையை கொட்டிய பின்னால்
அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும்
நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம்
எங்கே

சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்


உன் தாயும் கேட்டாலே
விண்மீன் வேண்டும் என்று
விண்மீன்கள் நான் தருவேன்
விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு
கேட்டாலே வானவில் வேண்டும்
என்று வானவில்லை நான் தருவேன்
வசந்தத்தை தருவாளா

உன் ஆசைகளை ஒரு நாளும்
நான் மறுக்கவும் இல்லையடி உன்
தாயை நான் ஒரு நாளும் இங்கு
வெறுக்கவும் இல்லையடி எந்தன்
தாயே என் முகம் பாரு உந்தன்
தாய்க்கும் நல் வழி கூறு

சின்ன மகராணியே
மகளாக வந்தாய் சிரிப்பால்
எந்தன் நெஞ்சில் சந்தோசம்
தந்தாய்

விஷ்லிங் :